உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

கரூர் மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

கரூர், கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று, கஞ்சா விற்பனை செய்வோர் மற்றும் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, லாலாப்பேட்டை கோம்பைபட்டி பஸ் ஸ்டாப்பில் கஞ்சா வைத்திருந்த, அதே பகுதியை ஜோசி சந்துரு, 24; தான்தோன்றி மலை சவுரிமுடி தெருவில் அருண் குமார், 19; கரூர் ஐந்து சாலையில் சந்துரு, 20; கரூர் காம ராஜ் மார்க்கெட்டில் லோகேஸ்வரன், 22; ஆகிய, நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 90 கிராம் கஞ்சாவையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை