உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 400 ரூபாயாக உயர்வு

400 ரூபாயாக உயர்வு

400 ரூபாயாக உயர்வுகிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், நேற்று வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மிகிளிப்பட்டி, கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, பொய்கைப்புத்துார், மகாதானபுரம் பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்று வருகின்றனர்.கடந்த வாரம் முதல், வரத்து சரிவு காரணமாக வாழைத்தார்கள் விலை உயர்ந்து வருகிறது. நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று, 350 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாழைத்தார்கள் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ