மருத்துவம் சார்ந்த ஓராண்டு படிப்பு நவ.,14 க்குள் விண்ணப்பிக்கலாம்
கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் சார்ந்த ஓராண்டு படிப்புக்கு நவ., 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் (பொ) ராஜா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 2025--26ம் கல்வியாண்டில், டயாலிசிஸ் டெக்னீசியன், அனஸ்தீஸியா டெக்னீசியன், தியேட்டர் டெக்னீசியன், எமர்ஜென்சி கேர் டெக்னீசியன் ஆகிய ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம், 17 வயது இருத்தல் வேண்டும். வயது உச்ச வரம்பு இல்லை. இந்த சேர்க்கைக்கு விண்ணப்ப படிவம் இலவசமாக, கரூர் மருத்துவக் கல்லுாரியில் வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், உரிய சான்றிதழ்களுடன் நவ.,14 மாலை, 5:00 மணிக்குள் கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு கல்வி கட்டணமாக, 1,450 ரூபாய் மட்டும் பெறப்படும். இது குறித்து கூடுதல் விபரங்களை பெற, 04324 - 242281 என்ற எண்ணிலோ அல்லது https://karurgmc.ac.in/course.php என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.