உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கரூர்::கரூர் திருவள்ளூர் மைதானத்தில், மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் கோடைக்கால கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் தனபதி தலைமை வகித்தார். கடந்த, 40 நாட்களாக நடந்த கோடைக்கால பயிற்சி முகாமில், 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற இவர்களுக்கு, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர்கள் திருப்பதி, சேகரன், சுதா, மித்ரா, பொருளாளர் சுகுமார், செயலர் செந்தில்குமார், துணை செயலாளர் பிரேம் ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை