மேலும் செய்திகள்
இளையான்குடியில் நாளை மருத்துவ முகாம்
25-Feb-2025
கரூர்: கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் இணைந்து நடத்தும், மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.கரூர் எம்.பி., ஜோதிமணி முகாமை தொடங்கி வைத்தார். முட நீக்கு சாதனம், செயற்கை கால், கை, மடக்கு சக்கரநாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ரோலேட்டர், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், காதொலி கருவி போன்ற உபகரணங்களில், டாக்டர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும்.மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டனர்.
25-Feb-2025