உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்தியதாக 2 பேர் மீது வழக்கு

மணல் கடத்தியதாக 2 பேர் மீது வழக்கு

கரூர், கரூர் அருகே, லாரியில் மணல் கடத்தியதாக, இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகம் வி.ஏ.ஓ., மணிவண்ணன், 41, உள்ளிட்ட வருவாய் துறை ஊழியர்கள் நேற்று முன்தினம், புதுப்பாளையம் காவிரியாற்று பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாரியில் காவிரியாற்றில் இருந்து, ஆறு யூனிட் மணலை கடத்தி சென்றதாக, கரூரை சேர்ந்த லாரி உரிமையாளர் குகன், 45, டிரைவர் தமிழ்மணி, 57, ஆகியோர் மீது, வி.ஏ.ஓ., மணிவண்ணன் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து குகன், தமிழ்மணி ஆகியோர் மீது, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ