உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே ஸ்டேஷன் சாலையில் திரியும் கால்நடைகளால் தொல்லை

ரயில்வே ஸ்டேஷன் சாலையில் திரியும் கால்நடைகளால் தொல்லை

கரூர், கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் திரியும் ஆடு, மாடுகளால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், ஆடு, மாடுகள் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கால்நடை-களை வளர்த்து வருபவர்களில் சிலர், அவற்றை தங்களது வீடு-களில் கட்டி வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். கால்ந-டைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதில், ஆடுகள் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையா-ளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்-டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ