ரெங்கநாதர் சுவாமி கோவிலில் இன்று தேரோட்ட உற்சவம்
கரூர், அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி, இன்று தேரோட்டம் நடக்கிறது.கரூர், அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 2 முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில், திருக்கல்யாண உற்வசம் நடந்தது. நேற்று எட்டாவது நாளாக, வேடுபறி வாகனத்தில், உற்சவர் ரெங்கநாதர் சுவாமியின் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.இன்று காலை தேரோட்டம் நடக்கிறது. அதற்காக, நேற்று தேரை அலங்கரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. நாளை அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, வரும், 12ல் ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.