மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு துவங்கியது: 274 பேர் ஆப்சென்ட்
கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்-கியது. 274 மாணவ, மாணவியர் 'ஆப்சென்ட்' ஆகினர்.தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், நேற்று மாநிலம் முழுவதும், 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. கரூர் மாவட்டத்தில், 59 தேர்வு மையங்களில், 5,076 மாணவர்கள், 5,781 மாணவியர், 1,103 தனித்-தேர்வர்கள் என, மொத்தமாக, 12 ஆயிரத்து, 590 மாணவ, மாண-வியர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை, கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்-ளியில், மாணவியர் ஆர்வத்துடன் தேர்வு எழுத, இறுதி கட்டமாக படித்து கொண்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று தமிழ் பாடத்தேர்வில், 253 மாணவ, மாண-வியர், 21 தனித்தேர்வர்கள் என, 274 பேர் தேர்வு எழுதாமல் 'ஆப்சென்ட்' ஆகினர்.* அரவக்குறிச்சி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வந்த மாணவியரை, தலைமை ஆசிரியர் உஷாராணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மனோகரன், உறுப்பினர் ஜோதிரத்தினம், இளநிலை உத-வியாளர் மணிமாறன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பள்ளிக்கு வந்து வாழ்த்தி இனிப்பு வழங்கினர்.