புகழூர் அரசு பள்ளியில் பணி நிறைவு பாராட்டு
கரூர், புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடந்தது.அரசு பணியில் ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, கணித ஆசிரியர் அமல்ராஜ் ஆகியோருக்கு, காகித ஆலை பொதுமேலாளர் கலைச்செல்வன் (மனித வளம்) நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். விழாவில், தாசில்தார் தனசேகரன், பி.டி.ஏ., தலைவர் நாச்சிமுத்து, முன்னாள் கல்வி அலுவலர் கருப்புசாமி, ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.