உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொத்தமல்லி கட்டு ரூ.10க்கு விற்பனை

கொத்தமல்லி கட்டு ரூ.10க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட குழந்தைப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி, சரவணபுரம், ஆகிய பகுதிகளில், விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது, கொத்தமல்லி செடிகள் பசுமையாக வளர்ந்துள்ளன. விளைந்த தழைகளை பறிக்கும் விவசாயிகள், அதனை சிறிய கட்டுகளாக கட்டி விற்பனை செய்கின்றனர். சிறிய கட்டு ஒன்று, 10 ரூபாய்க்கு விற்கின்றனர். மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் ஓரளவு லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி