உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாதாள சாக்கடை இணைப்பு பகுதிகளில் சாலை சேதத்தால் ஓட்டுனர்கள் அவதி

பாதாள சாக்கடை இணைப்பு பகுதிகளில் சாலை சேதத்தால் ஓட்டுனர்கள் அவதி

கரூர், கரூர் மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு கொடுக்கப்பட்ட இடங்களில், தார்ச்சாலை அமைக்கவில்லை. இதனால், குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கடந்த, 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில், 14 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. புதிதாக இணைக்கப்பட்ட சணப்பிரட்டி பழைய கிராம பஞ்சாயத்து பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் வீடுகள், வணிக நிறுவனங்களின் கழிவுநீர் குழாய்களை, பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்க, சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால், பல பகுதிகளில் இணைப்பு வேலைகள் முடிந்த பிறகு, தார்சாலை அமைக்கவில்லை. இதனால், மாநகராட்சி பகுதிகளில் முக்கிய தெருக்களில், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக, கரூர் ஜவஹர் பஜார் தினசரி மார்க்கெட் சாலைகளில் மிகப் பெரிய குழிகளும், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். எனவே, கரூர் மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் இணைக்கப்பட்ட தெருக்களில், புதிதாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை