உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதைப்பொருள் விழிப்புணர்வு கட்டுரை போட்டி: பரிசு வழங்கல்

போதைப்பொருள் விழிப்புணர்வு கட்டுரை போட்டி: பரிசு வழங்கல்

கிருஷ்ணராயபுரம் :போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சண்முகம், சட்டப்பணிகள் குழு வழக்கறிஞர்கள் செந்தில்குமார், ரவிச்சந்திரன், கிருஷ்ணராயபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வலர் கிருஷ்ணவேணி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை