உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாழைத்தார் விலை வீழ்ச்சி நஷ்டமடைந்துள்ள விவசாயிகள்

வாழைத்தார் விலை வீழ்ச்சி நஷ்டமடைந்துள்ள விவசாயிகள்

கரூர், கரூரில், வாழைத்தார்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில், வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. காவிரிக்கரையோரம் உள்ள புகழூர், வேலாயுதம்பாளையம், மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வாழை பயிரிடப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், கரூர் காமராஜர் மார்க்கெட்டில் உள்ள வாழை மண்டிகளுக்கு விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு, ஏலம் விடப்படுகிறது. வாழைத்தார் விளைச்சல் அதிகம் இருந்தபோதிலும், அவற்றுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இதுதொடர்பாக வாழை விவசாயிகள் கூறியதாவது:கடந்த மாதம், கரூர் வாழை மண்டியில் பூவன்தார், 500 ரூபாய், ரஸ்தாளி, 650 -ரூபாய், பச்சை நாடன், 500 ரூபாய், கற்பூரவள்ளி, 550 ரூபாய்க்கு விலை போனது. தற்போது பூவன் தார், 350 ரூபாய்-, ரஸ்தாளி, 400 ரூபாய், பச்சை நாடன், 300- ரூபாய்க்கு விற்பனையானது. விளைச்சல் அதிகம் இருந்தும், ஏலத்துக்கு கொண்டு சென்றால் அறுவடை கூலி, உரச்செலவு, வாகன செலவு கூட கிடைப்பதில்லை. தற்போது ஆனி மாதம் என்பதால் விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாததால், வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை