உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீ தொண்டு வார விழா உறுதிமொழி ஏற்பு

தீ தொண்டு வார விழா உறுதிமொழி ஏற்பு

கரூர்:கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில், தீ தொண்டு நாள் வார விழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.இதில், நிறுவன பொது மேலாளர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். உதவி மேலாளர் சபாபதி, தீ தொண்டு நாள் உறுதிமொழியை வாசிக்க அதிகாரிகள், தொழிலாளர்கள் அனைவரும், அதை திரும்ப கூறி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.உதவி பொது மேலாளர்கள் அசோகன், சரவணன், மேலாளர் சங்கிலிராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை