உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் துர்நாற்றம்

ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் துர்நாற்றம்

கரூர், கரூர் அருகே ரயில்வே ஸ்டேஷன் சாலையில், கழிவு நீர் நேற்று ஓடியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், கரூர் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் உள்ளது.இந்நிலையில், பல நாட்களாக ரயில்வே ஸ்டேஷன் சாலையில், சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறி, ஆறாக வெளியேறி வருகிறது. நேற்று அதிகளவு துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே, சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !