சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை
கிருஷ்ணராயபுரம், சந்தையூர் வாரச்சந்தையில், ஆடு, கோழி விற்பனை தீவிரமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்., இரும்பூதிப்பட்டி சந்தையூரில் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆடு, கோழி, காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கோழிகளை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர். ஏழு கிலோ கொண்ட ஆடு, 6,700 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி கிலோ, 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆடு, கோழிகளை கரூர், சேங்கல், பஞ்சப்பட்டி, குளித்தலை, லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர்.