உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

கரூர்: கரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், கோதுார் சாலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சிதம்பரம், 67; இவர் கடந்த, 3ல் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள, உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு, வீட்டுக்கு சென்ற போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த, இரண்டு பவுன் தங்கநகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசில் சிதம்பரம் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ