உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

குளித்தலை குளித்தலை அருகே, அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த சின்ன பொட்டல்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி, 44. இவர் கரூர் மாவட்டம், பூசாரிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 40, பி.உடையாபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்கள் தரகம்பட்டியில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.தங்கப்பாண்டி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த, 25ம் தேதி இரவு 8:00 மணியளவில் வீட்டில் இருந்த தங்கப்பாண்டி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் பரிசோதித்தபோது, ஏற்கனவே தங்கப்பாண்டி இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து, பாலவிடுதி போலீசார் ஆசிரியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அவரது மனைவி தமிழ்ச்செல்வி, 40, கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ