குறுவட்ட அளவில் தடகள போட்டி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
கரூர், தான்தோன்றிமலை குறு வட்ட அளவிலான போட்டியில், அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர்.தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை குறு வட்ட அளவிலான குழு போட்டி (2025---26) மற்றும் தடகள போட்டி நடந்தது. அதில், கவுண்டம்பாளையம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் வளைகோல் பந்தாட்டம், கால்பந்து, கபடி, சிலம்பம், கேரம் மற்றும் தடகளம் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியர் சிவகாமி, உதவி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில் குமார், சுகந்தி ஆகியோர் பாராட்டினர்.