கரூரில் அகில இந்திய கூடைப்பந்து இந்திய ராணுவம்-கே.எஸ்.இ.பி.,வெற்றி
கரூர் கரூரில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், கே.எஸ்.இ.பி., மற்றும் இந்திய ராணுவ அணிகள் வெற்றி பெற்றன.கரூர் கூடைப்பந்து குழு சார்பில், எல்.ஆர்.ஜி. நாயுடு சுழற்கோப்பைக்கான, 65வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த, 22 முதல், திருவள்ளுவர் மைதானத்தில் நடந்து வருகிறது. வரும், 27 வரை போட்டி நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் பிரிவு போட்டியில் இந்தியன் நேவியும், கே.எஸ்.இ.பி., அணிகளும் மோதின. இதில், 70 க்கு 67 என்ற புள்ளிக்கணக்கில் கே.எஸ்.இ.பி., அணி வெற்றி பெற்றது. அதே பிரிவில் இந்திய ராணுவம், கேரளா போலீஸ் அணிகள் மோதின. இதில், 76க்கு 56 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய ராணுவ அணி வெற்றி பெற்றது.