உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணையில் மீன் விற்பனை ஜோர்

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை ஜோர்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் நடுவே கதவணை கட்டப்பட்டுள்ளது. இதில் சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை, மாயனுார், சீலைப்பிள்ளைபுத்துார் பகுதியை சேர்ந்த மீனவர்கள், பரிசலில் சென்று வலைவீசி பிடித்துவந்து, காவிரி ஆற்றின் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது, ஜிலேபி, கெண்டை, விரால் ரக மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், லாலாப்பேட்டை, புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி, திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்களை வாங்கி சென்றனர். நேற்று, 400 கிலோ மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை