உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சித்திரை மா ரயில்வே மேம்பாலத்தில் தடுப்புகள் அமைக்கணும் கரூர் மக்கள் எதிர்பார்ப்புத பவுர்ணமி பரமேஸ்வரி அம்மன் தரிசனம்

சித்திரை மா ரயில்வே மேம்பாலத்தில் தடுப்புகள் அமைக்கணும் கரூர் மக்கள் எதிர்பார்ப்புத பவுர்ணமி பரமேஸ்வரி அம்மன் தரிசனம்

கரூர் : கரூரில் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் செல்லும் போது, கழிவுநீர் படாமல் இருக்கும் வகையில், தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் அருகே, பசுபதிபாளையம் ஐந்து சாலை அருகே நெரூர் சாலையில், திருச்சி மற்றும் திண்டுக்கல் செல்லும் ரயில்வே இருப்பு பாதை உள்ளது. இதற்கு அடியில், நெரூர், வாங்கல் செல்ல சாலை அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் ரயில்கள் செல்கிறது. ஆனால், மேம்பாலத்தில் தடுப்பு சுவர்கள் இல்லை.இந்நிலையில், கரூரில் இருந்து திருச்சி மற்றும் திண்டுக்கல் மார்க்கத்தில் நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. மேம்பாலத்தின் கீழே உள்ள சாலை வழியாக வாங்கல், நெரூர், கோயம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள், இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.மேம்பாலத்தில் ரயில்கள் செல்லும் போது, பயணிகள் கழிவறையை பயன்படுத்தும் நேரத்தில், கழிவுநீர் பாலத்துக்கு கீழே செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது. இதனால், மேம்பாலத்தில் ரயில் செல்லும் போது, பொதுமக்கள் ஒதுங்கி நின்று விடுகின்றனர். குறிப்பாக, பிரசித்தி பெற்ற நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்துக்கு, ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள சாலை வழியாகத் தான் பெரும்பாலும் செல்ல வேண்டும். அப்போது, ரயிலில் இருந்து கழிவுநீர் விழுவதால், பொதுமக்கள் சங்கடத்தில் நெளிகின்றனர்.எனவே, பசுபதிபாளையம் ஐந்து சாலை அருகே உள்ள, ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால், கரூர் மாநகரத்தை சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, கரூர் பசுபதிபாளையம் ஐந்து சாலை அருகே உள்ள, ரயில்வே மேம்பாலத்தில் தடுப்புகள் அமைக்க, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை