மேலும் செய்திகள்
மலர் அலங்காரத்தில் அம்மன்
19-Oct-2024
புகழிமலை கோவிலில்கிருத்திகை சிறப்பு பூஜைகரூர், அக். 20-புகழிமலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.கரூர் மாவட்டம், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு ஐப்பசி மாத கிருத்திகையையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகையை யொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.
19-Oct-2024