மேலும் செய்திகள்
வேலை நிறுத்தம்
18-Aug-2026
கரூர்:தமிழ்நாடு மாநில சுமை துாக்குவோர் பாதுகாப்பு சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் ராஜா தலைமையில், தொழிற்பேட்டை குடோனில், சுமை துாக்கும் தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன அதேபோல், மண்மங்கலம், அய்யர்மலை, காணியாளம்பட்டி ஆகிய பகுதிகளிலும், 150க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள், மாவட்ட பொருளாளர் ரஞ்சித் தலைமையில், நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18-Aug-2026