உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு ஆர்ப்பாட்டம்

நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு ஆர்ப்பாட்டம்

கரூர், புதிய நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நீதிமன்ற பயிற்சி வழங்க வேண்டும். புதிய நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட துணைத்தலைவர் மோகன்ராஜ், செயலாளர் தங்கவேல், இணை செயலாளர் குணசுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை