உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெள்ளியணை சாலையில் விளக்குகள் கட்டாயம் தேவை

வெள்ளியணை சாலையில் விளக்குகள் கட்டாயம் தேவை

கரூர், கரூர் - வெள்ளியணை விரிவாக்க சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் - வெள்ளியணை சாலை, மணவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால், கரூர்-வெள்ளியணை சாலையில், வெங்ககல்பட்டியில் இருந்து, வெள்ளியணை வரை சாலை விரிவாக்க பணிகள் சமீபத்தில் தொடங்கியது. தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், கரூர் - வெள்ளியணை சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, விரிவாக்க சாலையில் மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை