உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பழைய சேலம் சாலையில் விளக்குகள் தேவை: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

பழைய சேலம் சாலையில் விளக்குகள் தேவை: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கரூர், பழைய சேலம் விரிவாக்க சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர்-சேலம் பழைய சாலை, வாங்கப்பாளையம் பிரிவு, வெண்ணைமலை, செம்மடை வழியாக சேலம், நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ், லாரிகள் சென்று, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இணைகின்றன. இதனால், வாங்கப்பாளையம் பிரிவு முதல் சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை, சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி, நிறைவு பெற்று சாலை நடுவே தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், கரூர்-சேலம் பழைய சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பழைய சேலம் விரிவாக்க சாலையில் மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !