உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபட்டில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

மொபட்டில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

கரூர்:வெள்ளியணை அருகே, மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், ஈசநத்தம் கஸ்பா தெருவை சேர்ந்தவர் பாரி, 52; இவர் கடந்த, 28 இரவு டி.வி.எஸ்., ஜூபிடர் மொபட்டில், கரூர் - ஈசநத்தம் சாலை, பாகநத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மொபட் திடீரென நிலை தடுமாறி கீழே சாய்ந்தது. அதில், கீழே விழுந்த பாரி தலையில் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுகுறித்து, பாரியின் மனைவி மலர்விழி, 50; போலீசில் புகார் செய்தார்.வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை