மேலும் செய்திகள்
பூத வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் திருவீதி உலா
21-May-2025
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று மாலை கருட வாகனத்தில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந் தது.கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 11ல், கம்பம் நடுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த, 16ல் பூச்சொரிதல் ஊர்வலம், 18ல் காப்பு கட்டுதல், 26ல் தேரோட்டம், 27ல் மாவிளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 28ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.அதைதொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று மாலை கருட வாகனத்தில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
21-May-2025