இலவச வீட்டு மனை இடம் பார்வையிட்ட எம்.எல்.ஏ.,
குளித்தலை, குளித்தலை அடுத்த, புத்துார் குளம் வட பகுதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில், 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என, கிராம மக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, அரசுக்கு சொந்தமான இடத்தை எம்.எல்.ஏ., மாணிக்கம் பார்வையிட்டார். ஒன்றிய செயலர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், சந்திரன், பஞ்., மாஜி தலைவர் தணிகாசலம், வி.ஏ.ஓ.. ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.