உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு

நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு

கரூர், கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி, ஆயுதப் படை மைதானத்தில் நேற்று நடந்தது.கடந்த, 1959ல் அக்., 21ல் காஷ்மீர் அருகே லடாக் பகுதியில், ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்பு படை போலீசார், 10 பேர் உயிரிழந்தனர். அந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் அக்., 21 ல் பணியின் போது இறந்த, இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்த, நீத்தார் நினைவு தினத்தில், உயிரிழந்த போலீசார் நினைவாக ஸ்துாபி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு, கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஷ் தங்கையா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பிறகு, நடப்பாண்டு நாடு முழுவதும் பணியின் போது உயிரிழந்த, 191 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.அப்போது, டி.ஆர்.ஓ., கண்ணன், ஆர்.டி.ஓ., முகமது பைசல், ஏ.டி.எஸ்.பி., க்கள், பிரேம் ஆனந்த், பிரபாகரன், டி.எஸ்.பி., க்கள் செல்வராஜ், செந்தில் குமார், அப்துல் கபூர், முத்துக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ