வடிகால் வசதி இல்லை; கடும் சுகாதார சீர்கேடு
கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொளந்தானுார் பகுதியில் இருந்து மருத்துவ கல்லுாரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அம்மன் நகர் உள்ளது. இந்த நகரில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இந்த பகுதியில் முறையான சாக்கடை வடிகால் வசதி இல்லாத காரணத்தால், கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே, அம்மன் நகர் பகுதியில் சாக்கடை வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என, இப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.