செவிலியர்கள் 4 வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நேற்று கோரிக்கைகளை வலியு-றுத்தி செவிலியர்கள், நான்காவது நாளாக காத்தி-ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி, 356 ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும், உச்சநீதி-மன்ற மேல் முறையீட்டு வழக்கை கைவிட வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், 11 மாத ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியு-றுத்தி, சென்னையில் கடந்த, 18 முதல் போராட்டம் நட த்தி வருகின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று, சங்க உறுப்பினர் விஜயலட்சுமி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று நான்கா-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில் ஏராளமான செவலியர்கள் பங்கேற்றனர்.