சாலையில் இறைச்சி கழிவு துர்நாற்றத்தால் மக்கள் அவதி
கரூர், கரூர்-, பழைய சேலம் சாலை, ஈரோடு, கோவை உட்பட பல்வேறு சாலைகளில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இங்கு, இரவு நேரங்களில், குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து, கொட்டி விட்டு செல்கின்றனர்.அதை, மாநகராட்சி நிர்வாகம் நாள்தோறும் அகற்றுவது இல்லை. மழை பெய்யும் போது, தேங்கியுள்ள குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, தேங்கியுள்ள குப்பை, இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.