கரூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு இன்று வீரர்கள் தேர்வு
கரூர், மாநில கூடைப்பந்து போட்டிக்கான, கரூர் மாவட்ட அணிக்கு வீரர்கள், வீராங்கனைகள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதுகுறித்து, கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி வெளியிட்ட அறிக்கை:சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் மாநில அளவிலான, 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டி வரும் ஜூன், 1 முதல், 10 வரை நடக்கிறது. அதில், பங்கேற்க உள்ள கரூர் மாவட்ட அணிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு இன்று மாலை, 4:00 மணிக்கு கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடக்கிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த கூடைப் பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங் கனைகள் பங்கேற்கலாம்.இவ்வாறு, கூறியுள்ளார்.