மேலும் செய்திகள்
அரசு அலுவலர் துறை தேர்வு
27-Dec-2024
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் மகேந்திரன் தலைமையில், தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள், 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தாசில்தார் மகேந்திரன், சூடம் ஏற்றி பொங்கல் வைக்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை தாசில்தார் சாகுல் அமீது, மண்டல தாசில்தார் உமா, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள், அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Dec-2024