மேலும் செய்திகள்
மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை
10-Nov-2024
கரூர்: பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நேற்று மாலை, பால், தயிர், பன்னீர், பஞ்சா-மிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்-தது. பிறகு, நந்தி சிலைக்கு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடரா ஜர் சிலைகளுக்கும், மஹா தீபாரதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்-டது.வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்-பிகை சமேத மேக மாலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை யொட்டி, நேற்று, மாலை நந்தி சிலைக்கு, வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. பிறகு, மூலவர் மேகபாலீஸ்வரர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்த-மேடு ஈஸ்வரன் கோவில்களிலும், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
10-Nov-2024