உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, பிரதோஷபூஜையில், நேற்று பக்தர்கள் பங்கேற்றனர்.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி நந்தி சிலைக்கு நேற்று மதியம், 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது.* நன்செய்புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், மூலவருக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று, மாலை நடந்தது. அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும், பிரதோஷத்தையொட்டி, மூலவர், நந்தி சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.சிவாலயங்களில்...சனி பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழம் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், குளித்தலை மீனாட்சிசுந்தரேஸ்வர், மேட்டுமருதுார் ஆரா அமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதி ஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவில் சின்னரெட்டியப்பட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையப்பட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட பகுதி சிவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !