மேலும் செய்திகள்
வெங்கடரமண சுவாமி கோவில் திருப்பவித்ர வேள்வி விழா
15-Sep-2024
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு வரும், அக்., 4 ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. வரும் அக்., 10 ல் மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 12 ல் காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. வரும் செப்., 21 ல் முதலாவது சனி கிழமை வழிபாடு தொடங்குகிறது. அதையொட்டி, கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி, பக்தர்கள் வரிசையாக கோவிலுக்கு செல்லும் வகையில், மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
15-Sep-2024