உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.5.43 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரூ.5.43 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன்கள், பட்டா மாறுதல், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, 595 பேர் மனு அளித்தனர். அதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காதொலி கருவி, டெய்ஸி பிளேயர், கருப்பு கண்ணாடி, மூன்று சக்கர சைக்கிள், மடக்கு குச்சி மற்றும் பார்வையற்றோருக்காக கைகடிகாரம் உள்பட, 11 பயனாளிகளுக்கு, ஐந்து லட்சத்து, 43 ஆயிரத்து, 548 ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, தாட்கோ மேலாளர் முருக வேல், சப்-கலெக்டர் பிரகாசம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி