கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்கரூர் அக். 15-கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், ரேஷன் அட்டை கோருதல் உள்பட மொத்தம், 311 மனுக்களை மக்கள் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளிடம், 21 மனுக்கள் பெறப்பட்டது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் சார்பில், இரு பயனாளிகளுக்கு தலா, 88,400 ரூபாய்- மதிப்பிலான நவீன செயற்கை கால்களையும், இரு பயனாளிகளுக்கு தேசிய மாற்றுத் திறனாளிக்ளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஸ், ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.