உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாளை மக்கள் தொடர்பு முகாம்

நாளை மக்கள் தொடர்பு முகாம்

கரூர், வாங்கல் குப்புச்சிபாளையத்தில், நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.இது குறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிபாளையம் கிராமத்தில் புது வாங்கலம்மன் திருமண மண்டபத்தில் நாளை (11ம் தேதி) பகல் 11:00 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. முகாமில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி, பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மருத்துவ முகாம், அரசு துறைகள் சார்பாக கண்காட்சி நடக்கிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !