உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா இன்று தொடக்கம்

வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா இன்று தொடக்கம்

கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழா இன்று (அக்., 4 ல்) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.கரூர் தான்தோன்றி மலையில் பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு இன்று காலை, கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. நேற்று மாலை, 6.00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வீதிகளில் உலா வந்த போது, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று காலை, 9.00 முதல் காலை, 10:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. வரும், 10 மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 12 காலை, 9:15 மணிக்கு தேரோட்டம், 21ல் முத்து பல்லக்கு, 22ல் ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. புரட்டாசி திருவிழாவையொட்டி, கோவிலில் பக்தர்கள் வரிசையாக நின்று செல்ல, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி, 30க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் நிறுவப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ