உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புரட்டாசி மாத பவுர்ணமி கோவில்களில் கோலாகலம்

புரட்டாசி மாத பவுர்ணமி கோவில்களில் கோலாகலம்

கரூர்: புன்னம்சத்திரம், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி, சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அலங்கார பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* புகழிமலை ஆனந்த நடராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத பவுணர்மியை யொட்டி, மூலவருக்கு நேற்று சிறப்பு அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிறகு, கோவிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை