உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ரயில்வே ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர் கிளை எஸ்.ஆர்.எம்.யு., சார்பில், கிளை செயலாளர் கணேசன் தலைமையில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், எட்டாவது சம்பள கமிஷன் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், பணி நியமனம் தொடர்பான விதிமுறைகளை வெளியிட வேண்டும், 10 சதவீதம் காலி இடங்கள் இருந்தால் மட்டும், இடமாற்றம் என்ற உத்தரவை நீக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், நான்கு பெண்கள் உள்பட, 34 ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை