செவிலியர் கட்டடத்தை சுற்றி தேங்கும் மழைநீர்: சுவர் வீண்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் சமுதாயக்கூடம் அருகே, சுகாதார செவிலியர் கட்டடம் உள்ளது. இந்த வளாகத்தில் சுகாதாரம் சம்பந்தமான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. கடந்த வாரத்தில் அதிகமான மழை பெய்ததால், அப்பகுதியில் மழைநீர் தேங்கி கட்டடத்தின் வெளிப்புற பகுதியில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், மழைநீரால் அதிகமான கொசுக்கள் பரவி வருகிறது. சுற்றுப்புறம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, தேங்கியுள்ள மழைநீரை அகற்ற, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.