க.பரமத்தி யூனியன் அலுவலகத்தில் பதிவுத்துறை எழுத்தர் பணிக்கு தேர்வு
கரூர், க.பரமத்தி பஞ்., யூனியன் அலுவலகத்தில், பதிவுத்துறை எழுத்தர் பணிக்கு தேர்வு நடந்தது.க.பரமத்தி பஞ்., யூனியனில், ஒரு பதிவுத்துறை எழுத்தர் பணியிடம் காலியாக உள்ளது. அதற்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஒரு பதிவுத்துறை எழுத்தர் பணியிடத்துக்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து, 1,300 பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு க.பரமத்தி பஞ்., யூனியன் அலுவலகத்தில் எழுத்து தேர்வு நடந்தது. அதில், 400க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர்.