உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பேவர் பிளாக் பணிகளை முடிக்க கோரிக்கை

பேவர் பிளாக் பணிகளை முடிக்க கோரிக்கை

குளித்தலை: கூடலுார் பஞ்., பேரூர் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடியி-ருப்புகள் உள்ளன. இதில் பிச்சைமணி வீடு முதல், ஆறுமுகம் வீடு வரை பேவர் பிளாக் அமைக்க-வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்-தனர். இதையேற்று பஞ்.. பொது நிதியில் இருந்து பேவர் பிளாக் அமைக்க ஒன்றிய நிர்வாகம் அனுமதி அளித்தது. அனுமதி பெற்று, 3 மாதங்க-ளுக்கு மேலாக ஒன்றிய நிர்வாகம் பேவர் பிளாக் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.இதுகுறித்து, தோகைமலை ஒன்றிய ஆணையர் சுப்பிரமணி கூறுகையில்,''நிதியின்மையால் பேவர் பிளாக் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நிதி வந்தவுடன் பேவர் பிளாக் அமைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை