வீரராக்கியத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்
கரூர்: 'வீரராக்கியத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்' என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் அருகே, வீரராக்கியத்தில் இருந்து திருச்சி மற்றும் கரூருக்கு, ஏராளமான பணியாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக ஜவுளி, கொசுவலை, அரசு பணிகளுக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இங்குள்ள பஸ் ஸ்டாப்பில், கரூர், திருச்சியில் இருந்து செல்லும் பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை. சில தனியார் மற்றும் டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால், காலையில் வேலைக்கும் செல்லவும், மாலை வீடு திரும்பவும் மிகுந்த சிர-மப்படுகின்றனர். காலை நேர பஸ்சில் தொங்கியபடி செல்ல வேண்டியுள்ளது. எனவே, கூடுதல் பஸ்களை இயக்குவதுடன், அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என, பொது-மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.